districts

img

குத்தகை விவசாயிகளுக்காக பாடுபட்ட இராமாமிர்த தொண்டைமான் சிலை திறப்பு

சிபிஎம் தலைவர்கள் பங்கேற்பு கும்பகோணம், ஜன.24 - விடுதலை போராட்ட வீரர் ஏழை-எளிய மக்கள், குத்தகை விவசாயிகளுக்காக பாடு பட்ட இராமாமிர்த தொண்டைமான் சிலை  திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகில் உள்ள தத்து வாஞ்சேரியில் நடைபெற்றது.  முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கரய்யர் தலைமையில், காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி சிலையை திறந்து  வைத்தார். காங்கிரஸ் வடக்கு மாவட்டத்  தலைவர் டி.ஆர்.லோகநாதன் வரவேற்றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.பாரதி, கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மேயர் சரவ ணன், துணை மேயர் சுப. தமிழழகன் ஆகி யோர் பங்கேற்றனர்.