தூத்துக்குடி,அக்.7- எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத் தில் புதிதாக அமைக்கப்பட் டுள்ள ஒலி ஒளி காட்சி செயல் பாட்டினை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதி யார் மணிமண்டபத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் “விடுதலைப் போராட்டத் தில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் ரூ.5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஒலி, ஒளிக்காட்சி ஏற்பாடு நிறுவப் பட்டுள்ளது.இதன் செயல் பாட்டினை தமிழ் வளர்ச்சி - செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார், இந்நிகழ்வில் சமூக நலன்- மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே யன், கோவில்பட்டி கோட் டாட்சியர் மற்றும் எட்டய புரம் வட்டாட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.