districts

வாசிப்பு இயக்கம் தொடக்க விழா

பெரம்பலூர், ஆக.13 -

      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியில் சனிக்கிழமை வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.  கல்லூரி முதல்வர் முனைவர்  சாந்தா கோவிந்த் தலைமை வகித்தார். தமுஎகச பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் பேரா ப.செல்வகுமார் வாசிப்பு  இயக்கத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார். பின்பு,  முதலாமாண்டு மாணவர்கள் நூல் விமர்சன உரையாற்றி னர். தமுஎகச மாவட்ட தலைவர் முனைவர் அகவி சிறப்புரையாற்றினார்.