மயிலாடுதுறை, ஜன.23 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப் பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தொடங் கப்பட்டுள்ள நிலையில், மயிலாடு துறை வட்டத்தில் ஆத்துக்குடி, இளந் தோப்பு, கேசிங்கன், கிழாய், கோடங் குடி, கொற்கை, மணல்மேடு-1, நல்லத் துக்குடி, நமச்சிவாயபுரம், பாண்டூர், திருச்சிற்றம்பலம், 204-திருமங்கலம், திருவாளப்புத்தூர், குத்தாலம் வட்டத் தில் அனந்தநல்லூர், எழுமகளூர், கங்கா தாரபுரம், கந்தமங்கலம், கருப்பூர், கீழப் பருத்திக்குடி, கொக்கூர், கோமல், கோணேரிராஜபுரம், குத்தாலம், மேக் கிரிமங்கலம், மேலையூர், மேலமங்க நல்லூர், நச்சினார்குடி பாலையூர், பழைய கூடலூர், பெருஞ்சேரி, சிவாநகரம், தேரிழந்தோர், வழுவூர், தரங்கம்பாடி வட்டத்தில், கடக்கம், கீழையூர், கீழ் மாத்தூர், கிடங்கல், கிடாரங்கொண் டான், கொடைவிளாகம், மேமாத்தூர், மேலப்பெருபள்ளம், பெரம்பூர், திரு விளையாட்டம், முத்தூர், சீர்காழி வட் டத்தில், அகனி, அரசூர், கடவாசல், கீழையூர் 81, கொண்டத்தூர், மாதா னம், நாங்கூர், நிம்மேலி, பழையபாளை யம். பனங்கட்டாங்குடி, செம்மங்குடி, திருவாலி, திருவெண்காடு, வைத்தீஸ் வரன்கோயில், வள்ளுவக்குடி ஆகிய கிராமங்களில் இந்த வாரத்திலேயே படிப்படியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்க அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், செம்ப னார்கோயில் ஒன்றியக் குழுத்துணைத் தலைவர் பாஸ்கரன், தரங்கம்பாடி வட்டாட்சியர் தி.சரவணன், செம்ப னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மீனா, மஞ்சுளா மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.