மயிலாடுதுறை, ஏப்.30- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கத்திரி வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் கடைவீதியில், திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் திங்களன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடை பெற்ற நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ- வுமான நிவேதா எம்.முருகன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பானம் உள்ளிட்ட வற்றை வழங்கினார். தஞ்சை மண்டல தகவல் தொழில் பணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றியச் செயலாளர் அப்துல்மாலிக் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.