districts

img

அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா

அறந்தாங்கி, பிப்.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி யில் பயின்ற முன்னாள் மாணவர்களின் பங்க ளிப்பை கொண்டு அரை குளிரூட்டி, இன் வெர்ட்டர், அலுமினிய கதவு, ஜன்னல்கள், தாழ்தளகூரை, ஸ்மார்ட் போர்டு, பேட்டரி ஆகிய நவீனமயமாக்கப்பட்ட மூன்று திறன் மிகு வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளி யன்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு  கல்லூரி முதல்வர் ச.குமார் தலைமை வகித் தார். வணிகவியல் துறை தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். கல்லூரி அனைத்துத் துறை தலைவர்கள், முதல்வரின் நேர்முக  உதவியாளர் மற்றும் அலுவலக கண்காணிப் பாளர் வாழ்த்திப் பேசினர்.  பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் முனைவர் பி.ஜோதிமணி, ஊர்வணி  ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் திறன்மிகு வகுப்ப றைகளை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்பனைக்காடு ராணி யம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் சர்வம்.சரவணன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை விரிவுரையாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.