districts

img

ஒரத்தூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

நாகப்பட்டினம், மார்ச் 4 -  நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து  வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட் பட்ட பாப்பா கோயில் அருகே அமைந் துள்ள ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி சுமார் ரூ.254 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர்  மயிலாடுதுறையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத் தார். அதனைத் தொடர்ந்து ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா  நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களை சந்தித்துப்  பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீர்  ஆதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது இந்த மருத்துவக் கல்லூரி.  இதன் நிலையை அறிந்த தமிழக முதல்வர், 33 மாதங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த  வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, அனைத்து வசதிகளையும் மேற்கொண்டு தற்போது  நாகை அரசு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சருக்கும், அதிமுக  முக்கியப் பிரமுகர்களுக்கும் சொந்த மான இடம் இதைச் சுற்றி இருப்பதால்,  சாலை வசதி மற்றும் நீர் ஆதாரம் இல்லாத இடத்தில் இந்த மருத்துவ மனைக்கான இடத்தை தேர்வு செய்துள் ளதற்கு வேதனை தெரிவித்தார். இருப்பினும், இம்மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக் கப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டத்தில் முதல் முறை யாக, திங்களன்று முதல் திருவாரூர் அரசு மருத்துவமனையில், இதய நோய்க்கான உலகத் தரம் வாய்ந்த அனைத்து வசதிகளுடன்கூடிய சிகிச்சை  அளிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதே போன்று அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இத்திட்டத்தை விரி வாக்கம் செய்ய தமிழக முதல்வர் நடவ டிக்கை எடுத்து வருகிறார்” என்றார். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்,  தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலை வர் என்.கெளதமன், தட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப் பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர்  ஷாநவாஸ் மற்றும் அரசுத் துறை அதி காரிகள் பங்கேற்றனர்.