அரியலூர், பிப்.10 - அரியலூர் மற்றும் திரு மானூர் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட சில கிரா மங்களில் ரூ.69.25 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. மணக்கால் ஊராட்சி யில், சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின் னப்பா, ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், குடும்ப அட்டைதாரருக்கு அத்தி யாவசியப் பொருள்களை வழங்கினர். ஓ.கூத்தூர் கிராமத்தி லுள்ள ஊராட்சி ஒன்றிய தொ டக்கப் பள்ளியில், ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டிடம், வெள்ளூர் ஊராட்சி காலனித் தெருவில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடை, ராயம்புரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொ டக்கப் பள்ளியில் கட்டப்பட் டுள்ள ஒரு வகுப்பறை கட்டி டம், தேளுரில் அங்கன்வாடி மையக் கட்டிடம், கோவி லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரங்க மேடை, வெற்றியூரில் கட்டப்பட்டு உள்ள நியாய விலைக்கடை ஆகியவற்றை திறந்து வைத்தனர்.