தஞ்சாவூர், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் புதிய வருவாய் வட்டத்தினை, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திங்கள்கிழமை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி), பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, திரு வோணம் ஒன்றிய குழுத் தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர்கள் முருக வேல் (திருவோணம்), சுந்தரசெல்வி (ஒரத்த நாடு) ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக் கையின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திரு வோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்” என அறிவித்தார். அந்த முடிவை செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோ ணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது.