மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிய மின் மாற்றி திறப்பு விழா நடைபெற்றது. திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி கீழத்தெரு, பெரிய தெரு ஆகிய பகுதியில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகளை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் திறந்து வைத்து பேசினார்.