பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.13 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.