districts

மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, டிச. 4 - திருத்துறைப்பூண்டி பகுதியில் பல வருடங்களாக கோரிக்கை வைத்து கொண்டு வரப்பட்ட கல்லூரி கொருக்கை அரசு தொழில்நுட்பக் கல்லூரி. இந்த கல்லூரியில், கொரோனா காலத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கமும், வாலிபர் சங்கம் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. அதன் காரணமாக, தொடர்ந்து பேருந்துகள் இயக்கி வந்த நிலையில் தற்போது கொரோனா காலத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் கல்லூரி துவங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து மேலாளரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், பேருந்தை இயக்காததால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளியன்று பாமணி கடைத்தெருவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கு வந்த போக்குவரத்து துறை திருத்துறைப்பூண்டி கிளை மேலாளர் நடராஜன், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் நான்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் கல்லூரியில் குடிநீர் பற்றாக்குறை, மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை, செய்முறை தேர்வு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.