புதுக்கோட்டை, ஜூலை 20-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டையில் ரூ.28.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணி, ரூ.8.29 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணி, ரூ.5.91 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டுமான பணி ஆகிய வற்றையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர், வைரிவயல் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், பயனாளிகள் விண்ணப்பிக்க டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெறுவதை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, ஜூலை 24-ஆம் தேதி நடைபெற உள்ள பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ப.ஜஸ்டின் ஜெபராஜ், உதவித் திட்ட அலுவலர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராகாந்தி, வட்டாட்சியர் பாலகிருஷணன், செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.