மயிலாடுதுறை, ஜூலை 16 - மயிலாடுதுறை கேணிக்கரை கிங் பேலஸ் தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பி.என்.ராஜலெட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் ஒன்றியச் செயலாளர் எம்.கஸ்தூரி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி முன்மொழிந்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் பி.சுகந்தி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, பூம்புகார் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனை வர் என்.சாந்தகுமாரி, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின், சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர்.ரவீந்திரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை பாதிக்கும் நுண்நிதி கடன் நிறுவனங்களை தடை செய்ய வேண் டும். பெண்கள், குழந்தைகளுக்கு இடை யூறாக பள்ளி, கல்லூரிகள், மருத்துவ மனைகள் அருகேயுள்ள மதுக் கடை களை மூட வேண்டும். மாவட்ட முழு வதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். 50 ஆண்டுகளாக குடியி ருக்கும் கிராமப்புற, நகர்ப்புற மக்க ளுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும். மயிலாடுதுறை அரசு மருத்து வமனை சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரவு-செலவு அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா வாசித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாள ராக வெண்ணிலா, தலைவராக சரிதா, பொருளாளராக வனரோஜா, துணைச் செயலாளராக ராஜலெட்சுமி, துணைத் தலைவராக டி.ஆர்.ராணி உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக் குழுவும், 5 பேர் கொண்ட மாவட்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை மத்தியக் குழு உறுப்பினர் ராதிகா அறிவித்து நிறை வுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் சரிதா நன்றி கூறினார்.