districts

தூய்மைப் பணியாளர்களின் பெயரில் திருச்சி மாநகராட்சி நிதி மோசடி!

திருச்சிராப்பள்ளி, பிப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு கூட்டம் கட்சி யின் மாவட்ட அலுவலகம் வெண்மணி இல்லத்தில் வியாழனன்று நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் ‘‘திருச்சி மாந கராட்சியின் 65 வார்டுகளில் கூடுதலாக தூய்மைப் பணிதொழிலாளர்களை பணியமர்த்துவது என்ற பெயரில் சுமார் 250க்கும் மேற்பட்டோர், வார்டுக்கு 4, 5 பேர் என தினக்கூலி தொழி லாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.  அவ்வாறு பணியமர்த்தப் பட்டவர்கள் தூய்மைப் பணியை செய்வதில்லை என்பதும். வேலையே செய்யாமல் ஊதியம் பெற்று வருவதும் தெரிய வருகிறது. இவ்வாறு பினாமி பெயரில் மோசடியாக தொழிலாளர்க ளை அமர்த்தி நபர் ஒரு வருக்கு ரூ.575 வீதம் தினக்கூலியாக பெற்று பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபடுவது தெரிய வருகிறது.  ஒப்பந்தம் விடுவதை கைவிடுக! எனவே, முறைகேட் டிற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். வளர்ந்துவரும் திருச்சி மாநகரில் தூய்மைப் பணியில் ஏற்பட்டுள்ள பற்றாகுறையால் மாநக ரின் தூய்மைப் பணி பாதிக் கபடுவதோடு, கடும் பணிச் சுமையில் தூய்மைப் பணி யாளர்கள் சிக்கியுள்ளனர்.  எனவே, கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை பணி நியமனம் செய்வ தோடு, திருச்சி மாநகர தூய்மைப் பணியை முழுவ துமாக தனியார் நிறுவ னத்திற்கு ஒப்பந்தம் விடும் முடிவை கைவிட வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.