திருச்சிராப்பள்ளி, ஜன.25- திருச்சி ரயில்வே ஜங்ஷ னில் இன்ஸ்பெக்டர் தெய் வேந்திரன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையி னரும், ரயில்வே போலீசா ரும், மோப்பநாய் உதவியு டன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ் பிரஸ் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரயில் பெட்டி கழிவறையில் அட்டை பெட் டிகள் இருந்தது தெரிய வந்தது. மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த அட்டை பெட்டிகளை சோதித்த பின்னர், பிரித்து பார்த்தபோது அதில் 24 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.6,500 வரை இருக்க லாம் என்று பாதுகாப்பு படையி னர் தெரிவித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் மதுபாட் டில்கள் கடத்தி வந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.