கும்பகோணம், மே 10-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி மலை சுவாமிநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர் உமா தேவி, கோவில் கண்காணிப்பாளர் பழனிவேல் கும்பகோணம் ஆய்வா ளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களும், தாராசுரம் கே.எஸ்.கே. பொறி யியல் கல்லூரி மாணவிகளும், கோவிலில் உள்ள 12 உண்டி யல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.38 லட்சத்து 42 ஆயிரத்து 296 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 96 கிராம் தங்கம், 3 கிலோ 315 கிராம்வெள்ளி, வெளிநாட்டு நாண யங்கள் 126 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.