districts

செம்பனார்கோயிலில் ரூ.2 கோடிக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை, ஜூலை 17 -

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் மறைமுக பருத்தி ஏலம் திங்களன்று நடைபெற்றது.  

    தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் கண்கா ணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் நடைபெற்ற பருத்தி  ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக  ரூ.6,669-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,145-க்கும்  சராசரி விலையாக ரூ.6,375-க்கும் கொள்முதல் செய்யப்பட் டது. இந்நிலையில் சுமார் 3,500 குவிண்டால் பருத்தி  ரூ.2 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.  

    இந்த ஏலத்தில் 746 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும்  ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்க ளில் இருந்து 16 வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள்  கொள்முதல் செய்தனர்.