districts

img

இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடி... பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி

கங்கைகொண்ட சோழபுரம், ஏப்.6- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அக ழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்  றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களான கொந்தகை, அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி ஆகிய இரண்டு அக ழாய்வுப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெரம் பலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மூன்றாம் கட்ட அக ழாய்வுப்பணி வியாழனன்று தொடங்கியது. கங்கைகொண்டசோழபுரம், பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்  கொண்டம் வட்டத்தில் அமைந்துள்  ளது. சோழர்களின் இரண்டாம் தலைநகரமாக சுமார் 250 ஆண்டு கள் சிறப்புற்று விளங்கியது. இந்நக ரம் இரண்டு மதிற்சுவர்களை அர ணாகக் கொண்டு விளங்கியிருந் தது. மாளிகைமேட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில், சுட்ட  செங்கற்களால் கட்டப்பட்ட மாளி கையின் மதிற்சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. செங்கற்களின் பருமன் 1.10 செ.மீ. ஆகும். அடித்தளத்தில் கருங்கற் தூண்  கள் இரண்டு மீட்டர் இடை வெளியில் நடப்பட்டிருந்தது. குவார்ட்ஸ் மணிகள் தந்தப் பொருட்  கள், சங்கு வளையல்கள், கூரை  ஓடுகள் மற்றும் சீனப் பானை ஓடு கள் அகழாய்வில் சேகரிக்கப்பட் டன. இச்சீனப் பானை ஓடுகள், கி.பி.  11-12 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசர்கள் சீன நாட்டுடன் கொண்  டிருந்த வாணிகத் தொடர்பை எடுத்தியம்புகின்றன. சோழ பேரரசன் இராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை வரைச் சென்று வெற்றிவாகை சூடி யது  நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரையும், கங்கைகொண்டசோழீஸ்வரம் என்ற கோவிலையும், சோழகங்கம் என்ற ஏரியையும் இங்கு ஏற்படுத்தி னான்.  முதலாம் இராஜேந்திர சோழன் கங்கைகொண்டசோழபுரத்தை தலைநகராக ஆட்சி செய்த  பொழுது ஒரு பெரிய அரண்மனை யை உருவாக்கினான். இந்த அரண்  மனை காலப்போக்கில் அழிந்து இன்று மண்மேடாகி, மாளிகைமேடு  என்று அழைக்கப்படுகிறது. அக ழாய்வின் போது வெளிக்கொண ரப்பட்ட அரண்மனையின் அடிப் பகுதிகளை பாதுகாப்பதோடு இதில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு ஒரு அகழ்வைப்பகம் உருவாக்கப் பட்டு மக்கள் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளது. அகழாய்வின் போது அரண்  மனை செங்கற்கலால் கட்டப் பட்டிருந்தாலும் பெரிய அளவு களை உடைய செங்கற் தூண்  களும் அரண்மனையில் முப்ப ரிகை இருந்ததற்கு ஆதரமாக இரும்பு ஆணிகளும் இரும்புப் பட்டைகளும் கிடைத்துள்ளன.  அரண்மனை சுதை வேலைப்  பாடுகளுடன், வண்ண ஓவியங்  கள் தீட்டபட்டதற்கான சான்று களும் கிடைத்துள்ளது. மேலும், சோழர் காலத்தில் தமிழர்கள் சீனர்  களுடன் வணிகத் தொடர்பு கொண்  டிருந்தனர் என்பதற்கு சான்றாக சீன  பீங்கான் பொருட்கள் அக ழாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.  அகழாய்வின் போது அரண்மனை  செங்கல்லால் கட்டப்பட்டிருயதா லும் பெரிய அளவுகளை உடைய செங்கற்த் தூண்களும் அரண் மனைமாடி இருந்ததற்கான இரும்பு ஆணிகளும் இரும்புப் பட்டைகளும் கிடைத்துள்ளன. மேலும் அரண்மனை சுதை வேலைப்பாடுகளும், வண்ண ஓவியங்கள் தீட்டபட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது. சோழர் காலத்தில் தமிழர்கள் சீனர்களுடன் வணிக தொடர்பு கொண்டிருயதர் என்பதற்கு சான்  றாக சீன பீங்கானகளும் அகழாய் வில் கிடைக்கப் பெற்றுள்ளன.  இந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப்பணியை கோட் டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். இதற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் அகழ்வாராய்ச்சி செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்கு 10-க்கு10 என்ற அளவீடு கள் குழிகள் தோண்டும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 15 பேர் இந்த பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடி...
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் முதல்  கட்ட அகழாய்வு தொடங்கியுள் ளது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வடவலம் வட்டத்தில் மணிமங்க லம் மற்றும் ஆலங்குடி இடையே புதுக்கோட்டை நகரத்திலிருந்து 7.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை. செங்கல் லின் அளவு, நினைவுக் கல், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், குறியீட்டு  அடையாளங்கள், பிராமி பொறிக்  கப்பட்ட பானை ஓடுகளின் வாயி லாக இந்த இடம் சங்க கால  தொல்லியல் தளமாக அறியப்படு கிறது. ஏராளமான இரும்புக் கசடு கள், துயர்ஸ், சுடுமண் குழாய்கள். உலைகள் கிடைப்பது தொடக்க வரலாற்றுக் காலங்களிலும் இடைக்காலத்திலும் இரும்புத் தொழில் முழு வீச்சில் இருந்தது என்  பதைக் குறிக்கிறது. இரும்புக் காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்  கமாகும்.