திருச்சிராப்பள்ளி/இராமேஸ்வரம், ஜன. 20 - தமிழகத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக் கிழமை மாலை பெங்களூரு வில் இருந்து சென்னை வந் தார். பின்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளை யாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து புறப் பட்ட அவர் விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி வந்த டைந்தார். இங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சென்ற மோடி, பல்வேறு சன் னதிகளுக்கு சென்று அரங்க நாத சாமியை வழிபட்டார். தொடர்ந்து கம்பராமாயண பாராயணம் கேட்டு, கோவில் யானைக்கு மூன்று முறை உணவளித்தார்.
யானை துதிக்கையை உயர்த்தி பிர தமரின் தலையில் வைத்து ஆசீர்வதித்தது. தொடர்ந்து மொத்தம் எட்டு விநாடிகள் யானையின் துதிக்கையை தடவிக் கொடுத்தார். ஸ்ரீரங்கத்தில் வழி பாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி ஹெலிகாப்ட ரில் இராமேஸ்வரம் பயண மானார். பிற்பகல் 2.10 மணிக்கு இராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேக்கரும்பில் அவரது ஹெலிகாப்டர் தரை யிறங்கியது.
தொடர்ந்து இராமேஸ்வரத்திலுள்ள தீர்த்தக் கிணறுகளில் நீரா டிய பிரதமர் மோடி, 3.10 மணிக்கு அக்னி தீர்த்தத்தில் நீராடினார். தொடர்ந்து ருத் ராட்ச மாலை அணிந்து இராம நாதசுவாமி கோவிலில் மோடி சாமி கும்பிட்டார். ஞாயிறன்று காலை தனுஷ்கோடியிலுள்ள கோதண்டராமசாமி கோவி லுக்குச் செல்லும் அவர் அரிச் சல் முனையையும் பார்வை யிடுகிறார். மோடி இராமேஸ்வரம் வந்ததையொட்டி சனிக் கிழமை பகல் 12 முதல் 2.30 மணி வரை இராமேஸ்வரத் தில் பேருந்துகள் இயக்கப் படவில்லை.