புதுக்கோட்டை, ஏப்.20-
புதுக்கோட்டை மாவட்டத்தில், விராலி மலை வட்டத்துக்குள்பட்ட பாலாண்டம் பட்டி மற்றும் முக்கணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த ஆய்வில், தில்லியைச் சேர்ந்த டாக்டர் சுகேஷ் டிரிகா, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிஹினி பௌலோஸ் ஆகியோரைக் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஏப்.18, 19 ஆகிய தேதிகளில் பாலாண்டம்பட்டியிலும், ஏப்.20 அன்று முக்கணாமலைப்பட்டியிலும் ஆய்வு நடை பெற்றது.
ஆய்வில் புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ராகவி உள்ளிட்டோரும் கலந்து கொண்ட னர். இதேபோல கடந்த வாரம் மழையூர் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதே தர மதிப்பீட்டு ஆய்வு நடைபெற்றதும் குறிப்பிடத் தக்கது.
விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே கொடும்பா ளுர், ஆவூர் ஆகிய இரு ஆரம்ப சுகாதார நிலையங் களும், 30 படுக்கைகள் கொண்ட நீர்பழனி மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் தேசிய தர மதிப் பீட்டுச் சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே போல, கடியாப்பட்டி, ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இச்சான்றிதழைப் பெற்றுள்ளன.
இந்தச் சான்று பெறும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டு களுக்கு சிறப்பு நிதி தேசிய சுகாதாரத் திட்டத்தில் இருந்து வழங்கப்படும். இந்த நிதி மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்தி தரமான மருத்துவச் சேவையை மக்க ளுக்கு வழங்க முடியும்.