பொன்னமராவதி, ஜூலை 18 -
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலிய மங்கலம், மறவாமதுரை, கொன்னையம்பட்டி, காரை யூர், மேலத்தானியம் ஊராட்சிகளில் வசதியான வர்களை இணைத்தும் உண்மையான பயனாளி களை புறக்கணித்தும் வெளி யிடப்பட்டுள்ள வறுமைக் கோட்டு பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.
இதில் உரிய முறையில் விசாரணை நடத்தி ஏழை பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் இணைந்து பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து, காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். வி.தொ.ச. மாநிலச் செய லாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாவட்டப் பொருளாளர் க.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். பக்ருதீன் உட்பட நூற்றுக் கணக்கானோர் போராட் டத்தில் பங்கேற்றனர். இறுதி யாக, வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனுக்களை அளித் தனர்.