நாகப்பட்டினம், டிச.9 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில், பல்வேறு அரசியல் கட்சி களில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்த விழா நடை பெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கீழை யூர் ஊராட்சியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் தங்களை இணைத்துக் கொண்டன. மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணி வித்து வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர்கள், கீழையூர் ஏ கிளை செயலாளர் ஏ.நடேச ஜெயராமன், பி கிளை செயலாளர் எஸ்.சுலைமான் சேட் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.