districts

நாச்சியார்கோவிலில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடை

கும்பகோணம், ஜூலை 9 -

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள  நாச்சியார்கோவிலில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் குத்து விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு  போதுமான மின்சார வசதி இல்லாததாலும், மின்னழுத்த  குறைபாடுகளாலும் சாதனங்கள் பழுதடைகின்றன. இத னால் பணிகள் முழுமையாக நடைபெறாத நிலை உள்ளது.

   இந்நிலையில் மாதத்திற்கு ஒருமுறை மின் பரா மரிப்புக்காக மின்தடை ஏற்படுத்தப்படும். இதுமட்டு மின்றி, சில நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையும்  ஏற்படுகிறது. திடீரென்று அடிக்கடி திங்கள், புதன், வெள்ளி என தொடர்ந்து வேலை நாட்களில் மின்தடை ஏற்படு வதால், குத்துவிளக்கு தொழில் மிகவும் பாதிக்கப்படு கிறது.

   நாச்சியார்கோவில் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுத்துவதை நிறுத்தி, குறை மின்னழுத்த குறைபாடு களை நீக்கி, சீரான மின்சாரம் வழங்க மின்சாரத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாச்சியார்கோ வில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.