மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ - பெரியக்காள் ஆகியோரது மகன் தீக்கதிர் திருச்சி பதிப்பு விளம்பர பிரிவு பொறுப்பாளர் இரா.ஸ்டாலின் - சங்கீதா திருமணம் குளித்தலையில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, பொது மேலாளர்கள் ஜெயபால் (திருச்சி), ஜோ.ராஜ்மோகன் (மதுரை), கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.பாலா, கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் சங்கர் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.