districts

ஓணத்திற்கு மாநிலங்களுக்கு இடையே கூடுதலாக 50 கேரளப் பேருந்துகள்

திருவனந்தபுரம், ஆக.13-

     ஓணம் பண்டிகையின் போது மாநிலங்களுக்கு இடை யேயான 55 சேவைகளை கேஎஸ்ஆர்டிசி நடத்தும். 30 சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் அதிகரித்த போக்குவரத்து நெருக்கடி காரணமாக, மேலும் சேவைகள் தொடங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5 வரை சென்னை, மைசூரு மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு சேவைகள் நடக்கும். மேலும் 23 முதல் 28 வரை கூடுதல் சேவைகள் உள்ளன.

    கோழிக்கோடு டிப்போவில் இருந்து 12, திருச்சூர் டிப்போவில் இருந்து 6, எர்ணாகுளம் டிப்போவில் இருந்து 14, கோட்டயத்தில் இருந்து 6, கண்ணூரில் இருந்து 4  மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து 8 கூடுதல் சேவைகள் இயக்கப்படுகின்றன.

      தனியார் சேவைகளுடன் ஒப்பிடுகையில் கட்டணம் மிகவும் குறைவு. சிறப்பு சேவைகளுக்கு கூடுதல் கட்ட ணங்கள் பொருந்தும். பெங்களூருவில் அவசர சேவைக்காக கூடுதலாக மூன்று டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  அதிக பயணிகள் வந்தால் இவை  பயன்படுத்தப்படும்.

23 முதல் 28 வரை கூடுதல் சேவைகள்

     பெங்களூரு--கோழிக்கோடு (குட்டா, மானந்தவாடி வழியாக) இரவு 9.15 மணிக்கு, பெங்களூரு-கோழிக் கோடு (குட்டா, மானந்தவாடி வழியாக) இரவு 9.45 மணிக்கு, பெங்களூரு-திருச்சூர் (சேலம், கோவை, பாலக் காடு வழியாக) இரவு 9.15 மணிக்கு, பெங்களூரு-எரணா குளம் (சேலம் வழியாக) மாலை 6.30 , கோயம்புத்தூர், பாலக்காடு, இரவு 8.30 மணி, பெங்களூரு-எரணாகுளம் (சேலம், கோவை, பாலக்காடு வழியாக) இரவு 7.10 மணிக்கு, பெங்களூரு- கோட்டயம் (சேலம், கோவை, பாலக்காடு வழியாக), இரவு 10.45 மணி பெங்களூரு-கண்ணூர் (இரிட்டி வழியாக), 7.30 மணி, பெங்களூரு- திருவனந்தபுரம் (நாகர்கோவில் வழியாக) 7.30. மணிக்கு