districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்க! அக்.3-இல் மத்திய தொழிற்சங்கங்கள்,  ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.24 - லக்கிம்பூரில் விவசாயி கள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி அக்.3 அன்று போராட் டம் நடைபெற உள்ளது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு குழு கூட்டம் திருச்சி மிளகுபாறையில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செய லாளர்கள் தொ.மு.ச. ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட்  நாரயணன், ஏஐசிசிடியு ஞானதேசிகன், எச்எம்எஸ் ஞானதுரை, எஸ்.கே.எம்.அயிலை சிவசூரியன் மற்றும் அனைத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டு அக் டோபர் 3 அன்று உத்தரப்பிர தேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட் டத்தில், காரை ஏற்றியும், அதன்பின் நடந்த கலவரத்தி லும் மொத்தம் 9 பேர்  படுகொலை செய்யப்பட்ட னர். இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 2023 அக் டோபர் 3 அன்று போராட்டம் நடைபெற உள்ளது.  அதனொரு பகுதியாக, திருச்சியில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு கருப்புச் சட்டை அணிந்து, கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. தாலுகா, ஒன்றியத் தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

செப்.28 கரூரில் சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சு.வெங்கடேசன் எம்.பி., பங்கேற்பு

கரூர், செப்.24 - செப்.28 அன்று கரூரில் சிபிஎம் நிதியளிப்பு பொதுக் கூட்டம்  நடைபெற உள்ளது. இதில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்கிறார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கூறுகையில், “கட்சியின் கரூர்  மாவட்டக் குழு சார்பில் செப்.28 அன்று மாலை 5 மணிக்கு கரூர் உழவர் சந்தை முன்பு மாபெரும் அரசியல் விளக்க, நிதி யளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் கரூர் மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி தலைமை வகிக்கிறார். மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு.வெங்கடேசன் நிதியை பெற்றுக் கொண்டு சிறப்பு ரையாற்றுகிறார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச்  செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், உறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புதுகை  பூபாலன் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது” என்றார்.

நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டது
தஞ்சையில் திருமாவளவன் பேட்டி

தஞ்சாவூர், செப்.24 -  நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டதால்,  அதை ரத்து செய்ய வேண்டும் என விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.  திருமாவளவன் கூறியுள்ளார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையி லுள்ள மறியல் பகுதியில், ஆதித்தமிழர் பாது காப்பு பேரவை, டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வு செயல் திட்டம் தோல்விய டைந்து விட்டது என்பதை பாஜக ஒப்புக் கொண்டு, தேர்வு எழுதி இருந்தால் போதும்,  தேர்ச்சி பெறத் தேவையில்லை என அறி விக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக, கர்நாட கத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக முழு அடைப்பு போராட்டத்தை நடத்து கிறது. காவிரி பிரச்சனையில், கர்நாடக மாநி லத்தில் உள்ள பாஜக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக  அரசு தமிழகத்துக்கு எதிராக இல்லை என காட்டிக் கொள்கிறது. இந்த இரட்டைப் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுகவும், பாஜகவும் அரசியல் நாடகம் நடத்துகிறது. இரு கட்சிகளும் கூட்ட ணியை ஒரு போதும் முறித்துக் கொள்ளாது. அதிமுகவை நம்பி பாஜக உள்ளது. இதே போல, பாஜகவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தணித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. பாஜகவை அதிமுக சுமப்பதால், அக்கட்சி வாக்கு வங்கியை மேலும் இழக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று கல்விக் கடன் வழங்கும் முகாம்

புதுக்கோட்டை, செப்.24 - முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்விக்கடன் வழங்கும்  முகாம் செப்.25 (திங்கள்) அன்று காலை 8 மணி முதல்  புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும்  ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டி ருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்துக் கொண்டி ருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி,  பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் மாநில, ஒன்றிய அர சின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரி மாணவ,  மாணவிகளும் கல்விக் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள 10 ஆம் வகுப்பு மதிப்பெண்  சான்றிதழ் நகல், 12 ஆம் வகுப்பு சான்றிதழ் நகல், ரேசன்  அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல்,  கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி  சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய  ஆவணங்களுடன் வருகை தர வேண்டும்.  மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு முகாம் நடக்கும் இடத்தில் இ-சேவை மையம் மூலம் பதிவு  செய்து தரப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தெரிவித்துள்ளார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில்  பல்நோக்கு சேவைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு

தஞ்சாவூர், செப்.24 - தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்க பணியாளர்கள் அசோசி யேசன் (பேக்ஸியா) செயற்குழு கூட்டம்  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மாநிலத் தலைவர் சி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டச் செயலாளரும், டெல்டா மண்டல பொறுப்பாளருமான ஜி.மாதவன் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் திருநாவு.குமரேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் திலகவதி நன்றி கூறி னார். மாநிலப் பொருளாளர் ஜி.அன்புக்கரசு, மாநில துணைத் தலை வர்கள், மாநில இணைச் செயலாளர் கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வா கிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தொடக்க கூட்டுறவு சங்கங்களில், பல்நோக்கு சேவை திட்டத்தை வலுக் கட்டாயமாக செயல்படுத்தி நட்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தேவை உள்ள சங்கங்களில் மட்டும் இதனை செயல்படுத்த வேண்டும். இதர  சங்கங்களில் திட்டப் பணிகளை நிறுத்தி  வைக்க வேண்டும்.  நகர கடன், கூட்டுறவு கடன் சங்கங்க ளில் நீண்ட நாளாக நிலுவையில் உள்ள  பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பணியாளர்களின் ஊதிய  உயர்வு குறித்த கமிட்டி அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களையும் சேர்த்து ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி  வழங்க வேண்டும். அரசின் கடன்  தள்ளுபடி திட்டத்தின்கீழ் சங்கங் களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையினை வட்டியுடன் விடுவிக்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து சங்க பணியாளர்களுக்கும் போனஸ் மற்றும் பண்டிகை முன் பணம் வழங்கிட வேண்டும்.  குழு தணிக்கை என்ற பெயரில்  நடைபெறும் கூட்டுறவு தணிக்கை யினை உடனே நிறுத்தவும், பட்டயக் கணக்காளர்களை கொண்டு கூட்டுறவு  சங்கங்களை தணிக்கை மேற்கொள்ள வும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மேலும், 9 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

அரசு தொகுப்பு வீடு இடிந்து சேதம்: நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை, செப்.24 - கொத்தங்குடி ஊராட்சி யில் அரசு தொகுப்பு வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஞாயிறன்று நிவாரண உதவிகளை வழங் கினார். மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி, கீழ் கரை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அல் போன்ஸ் மேரி (49). இவரது கணவர் பன்னீர்செல்வம். இவர்களுக்கு 2 மகன், ஒரு  மகள் உள்ளனர். இவர்களது அரசு தொகுப்பு வீடு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், சில தினங் களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், வியாழ னன்று பிற்பகல் வீட்டின் மேற்கூரை தாரைகள் பெயர்ந்து விழுந்து சேதம டைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பூம்புகார் தொகுதி சட்டப்  பேரவை உறுப்பினர் நிவேதா  எம்.முருகன், நேரில் சென்று  பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் சந்தித்து தனது சொந்த  நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருட் களை வழங்கி ஆறுதல் தெரி வித்தார்.

நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில்  குடமுழுக்கு விழாவை பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்த முடிவு

கும்பகோணம், செப்.24- சீனிவாச பெருமாள் கோவில் குட முழுக்கு விழாவை பொதுமக்கள் பங்களிப் போடு நடத்துவதென முடிவு செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு அக்.27 அன்று (வெள்ளிக்கிழமை) காலை  நடைபெறுகிறது. இதனையொட்டி பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வர்த்த கர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்கோயிலில் செயல் அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  குடமுழுக்கு விழாவிற்கு அமைக்கப் படும் யாக சாலையை ஊர் பொதுமக்கள் பங்களிப்போடு செய்வது, திருக்கோயில் குளத்தின் வடிகால்களை சீரமைத்து அதை தூய்மைப்படுத்துவது, கோயில்களின் கல்யாண மண்டபத்தில் சீரமைப்பு பணி  மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வருவது, உற்சவ காலங்க ளில் கோடியாக்கள், கொத்தனார் மற்றும்  குத்தகைதாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது. கிராம நாட்டாமை தாரர்களுக்கு திருக்குடமுழுக்கு அழைப்பி தழ் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்காத கூட்டுறவு வங்கி போராட்டம் நடத்த முடிவு 

தஞ்சாவூர், செப்.24 -  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் மாரியம் மன் கோவிலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றியக் குழு கூட்டம் அண்ணாமலை தலை மையில் நடைபெற்றது.  இதில் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் வி.ரவி, பொருளாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜான் பீட்டர், துணைத் தலைவர் அன்பரசன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், “அம்மாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது, சங்கத்தில் பொறுப்புத் தலைவராக ராஜேந் திரன் செயல்படுவது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

200 கிலோ குட்கா பறிமுதல்: மூவர் கைது 

பாபநாசம், செப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே 200  கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார்  கைது செய்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சோழமாதேவி பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த அஷரப் அலி  என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தக வலின்பேரில், குட்கா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவிலைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை தனிப்படை போலீ சார் கைது செய்து நவல்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் விக்னேஸ்வரனின் தந்தை, பசுபதி கோவில் இந்திரா நகரைச் சேர்ந்த செல்வராஜ் வீட்டில்  இருந்த குட்காவை, அதே பகுதியைச் சேர்ந்த தனது  நண்பர் நந்தகுமார் என்பவரது வீட்டிற்கு, ஒரு ஆட்டோ வில் எடுத்து சென்று பதுக்கி வைத்திருப்பதாக அய்யம் பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன்பேரில் அய்யம்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று நந்தகுமார் வீட்டில் பதுக்கி வைத் திருந்த 200 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட ஆட்டோ மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றி னர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வராஜ், அவரது நண்பர் நந்தகுமார், ஆட்டோ ஓட்டுநர்  சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

வேலை கிடைக்காமல் பொறியாளர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்தது ஆர்எஸ்எஸ் ஊழியரின் மகன்

நாகர்கோவில், செப்.24- வேலை கிடைக்காத நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த பொறி யாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வேலையில்லா திண் டாட்டம் ஆர் எஸ் எஸ் காரர் மகனையும் தற்கொலைக்கு துரத்திய கொடுமை கன்னியாகுமரி அருகே நடந்துள்ளது. கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வ ரம் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்ட வாளத்தில் வெள்ளியன்று மதியம் சிதறிய நிலையில் காயங்களுடன் கிடந்தது ஈத்தா மொழி தெற்கு வெள்ளியாவிளை பகுதியை  சேர்ந்த ஆதிசுவாமியின் மகன் அருண் பிர சாத் (வயது 34) என்பது தெரிய வந்துள்  ளது. அருண் பிரசாத் மெக்கானிக் என்ஜி னீயரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்  தார். ஆனால் படிப்புக்கேற்ற வேலை அவ ருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். அருண் பிரசாத்தின் தந்தை ஆதி சுவாமி ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இவருக்கு அருண் பிரசாத் (34), பிரவீன்,  பிரதீஷ் என 3 மகன்கள். மூத்த மகனான  அருண் பிரசாத்திற்கு அவரது பெற்றோர்  திருமணம் செய்து வைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஆனால் வேலை இல்லா மல் திருமணம் செய்ய அருண் பிரசாத்  விரும்பவில்லை. ஆனாலும், பெற்றோ ரின் முடிவுபடி அண்மையில் அருண் பிர சாத்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. குழப்பத்தில் இருந்த அருண் பிர சாத் வெள்ளியன்று அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் பகுதிக்கு இருசக்கர வாக னத்தில் வந்துள்ளார். அப்போது கன்னியா குமரியில் இருந்து புனலூர் செல்லும் ரயில் முன்பு திடீரென பாய்ந்துள்ளார். இதில்  அவர் உடல் சிதறி பலியானார். இந்த சம்ப வம் குறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் ஊழியரின் மகன் ரயில் முன்பு பாயந்து தற்கொலை செய்து கொண்ட அருண் பிரசாத்தின் தந்தை  ஆதிசுவாமி ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊழி யராவார். நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ்  முகாம்கள் அமைத்து பயிற்சி அளித்து வரு கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளால் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையின்மையால் அனைத்து குடும் பங்களிலும் இளைஞர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. ஆர் எஸ் எஸ் ஊழியரின் குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்

தஞ்சாவூர், செப்.24-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியத்  தலைவர் கோ. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு ஆகியோர் பேசினர்.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடு பட்ட, தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள நூறு நாள் வேலைத்திட்ட ஊதியத்தை பயனாளிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். ஜாப் கார்டுடன் ஆதார் அட்டையை  இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும்.  அனைத்து பேருந்துகளும் புறவழிச் சாலை வழியாக செல்லாமல், ஒரத்தநாடு நக ருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக மன்னார்குடி முக்கத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும்.  ஒரத்தநாட்டில் முத்தரையர், பட்டியல்  இனத்தவர் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும். தெற்கு  நத்தம் கிராமத்தில் ஏற்கனவே அளவீடு செய்து அடையாளம் காண்பிக்கப்பட்டும், இதுவரை அமைக்கப்படாத சாலையை உட னடியாக அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரி செலுத்தாமல் ஏலக்காய் கடத்தல்: அபராதம் விதிப்பு

தேனி, செப்.24- தேனி மாவட்ட வணிகவரித்துறை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவி னர் போடி முந்தல் அருகே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போடி மெட்டு மலைச்சாலையில் இருந்து  வந்த ஜீப்பை சோதனை செய்தனர்.அதில் வரி  செலுத்தாமல் ஏலக்காய்களை விற்ப னைக்குக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து ஜீப் ஓட்டுநர் ராஜாவிடம் விசா ரணை நடைபெற்றது.இதில் 23 மூடைகளில் 900 கிலோ ஏலக்காய்கள் இருப்பது தெரிய  வந்தது. ஏலக்காயை கடத்திய குற்றத்திற்காக  ரூ.1.54லட்சம் அபராதம் விதிக் கப்பட்டது.அடுத்தடுத்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டால் ஜீப், ஏலக்காய்கள் பறிமுதல் செய் யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயருகிறது

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை திண்டுக்கல், செப்.24- மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51 அடியை  எட்டியதால் அணையிலிருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளது. அதனால் கரையோர மக்கள் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு. உள்  ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 57 அடி ஆகும்.  இந்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டக்  கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு மெனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு  ஆற்றங்கரையோரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, தேவதானபட்டி, கல்லுபட்டி, தும்மலபட்டி, ஊத்தங் கல்பட்டி, புதுப்பட்டி, வத்தலகுண்டு பகுதி மக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர். 53 அடியை நீர் மட்டம் எட்டியவுடன் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 57 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உபரி நீர் அணையிலிருந்து திறக்கப் படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.