திருச்சிராப்பள்ளி, ஜூலை 12-
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப் பாளர்களுடன் 3 அமைச்சர்கள் நடத் திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். தேர்தல் கால வாக் குறுதிகளையும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் அளித்த வாக்குறுதி களையும், ஜாக்டோ-ஜியோ வாழ்வா தார நம்பிக்கை மாநாட்டு வாக்குறுதி களையும் நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நமுறைப்படுத்த வேண்டும்.
ஒன் றிய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் டர் வழங்க வேண்டும். அரசாணை எண். 152 மற்றும் 115ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். காலை சிற் றுண்டி திட்டத்திற்கு சத்துணவு ஊழி யர்களையே பயன்படுத்த வேண்டும்.
சாலைப் பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகை யில் 4.50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதி யம், மதிப்பூதியத்தை ரத்து செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வெளி முகமை, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
மாவட்ட மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் முனைவர் கா.பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பழனிச்சாமி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைத் தலைவர் ஏ.பெரிய சாமி நிறைவுரையாற்றினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வே. சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உரையாற்றி னார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யரக வாயிலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.ராணி, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவ குமார், மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.