districts

img

ஆலவயலில் கபடிப் போட்டி: இலுப்பூர் அணி முதலிடம்

பொன்னமராவதி, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே ஆலவயலில் திமுக விளை யாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில் மாநில அள விலான கபடிப் போட்டி நடைபெற்றது.  தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  போட்டியினை துவக்கி வைத்தார். புதுக் கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல்,  மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணி கள் பங்கேற்று விளையாடின.  இதில் முதல் பரிசான ரூ.25,046 மற்றும்  அதற்கான வெற்றிக் கோப்பையை இலுப்பூர்  அணியும், 2-ஆம் பரிசான ரூ.20,046 மற்றும்  வெற்றிக் கோப்பையை ஆலவயல் அம்பாள்  அணியும், 3-வது பரிசான ரூ.15,046 மற்றும்  வெற்றிக் கோப்பையை கண்டெடுத்தான் பட்டி அணியும், 4-ஆம் பரிசான ரூ.10,046 மற்றும் அதற்கான வெற்றிக் கோப்பையை பூலாங்குறிச்சி அணியும் பெற்றன.