districts

img

இலுப்பூர் தியாகி கோவிந்தராஜ் நினைவு தின பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, பிப்.9 - மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன் பந்தலில் இலுப்பூர் தியாகி வீ.கோவிந்த ராஜ் 41 ஆம் ஆண்டு நினைவு தின  பொதுக்கூட்டம் வியாழனன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம் பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.ராணி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆசிக்  ரஹ்மான், கிளைச் செயலாளர் ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் என்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.  கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப் பினர்கள் காபிரியேல், அம்மையப்பன்,  அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக கட்சியின் தரங்கம் பாடி ஒன்றியக் குழு சார்பில் முதற்கட்ட  கட்சி நிதியாக 1 லட்சத்து 83  ஆயி ரத்து 980 ரூபாயை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றியச் செய லாளர் ஏ.ரவிச்சந்திரன், மாநில செயற் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினர். இலுப்பூர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார். சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர்  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.