கும்பகோணம், ஜூலை 30-
மணிப்பூர் மாநிலத்தில் நடை பெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய ஒன்றிய-மாநில பாஜக அரசு களைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட் டம் திருவிடைமருதூரை அடுத் துள்ள திருச்சேறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலை மை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் பழனிவேல், தருமையன், ஆனந் தன், முருகன் உட்பட ஏராளமா னோர் பங்கற்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடியை அடுத்துள்ள வாஞ்சியூரில் கட்சியின் கிளைச் செயலாளர் யூ. கவியரசன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ். சக்திவேல். டி.செல்வராஜ், பொ. திருநீலகண்டன், பாலசுப்பிரமணி யன், டி ஐயப்பன், நகர் செயலாளர் ஜி. தாயுமானவன், ஒன்றியச் செயலா ளர் கே.ஜெயபால், சிஐடியு ஜி.ரகு பதி, டி.ஜெகதீசன், ஜி மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் புலி வலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க துணைத் தலைவர் வீராசாமி தலைமை வகித்தார் . மாநி லப் பொருளாளர் பழனிச்சாமி, சத்ய ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சந்தி ரன், காஜாமைதீன், கருணாகரன், செந்தில்குமார், ராஜேந்திரன், பிரபு, லிங்க ராணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நட ராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் சம்பத், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் பாலகுமார், அப்துல் காதர் பாஷா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.