districts

விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்

தஞ்சாவூர், ஜன.23-  விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.சு. பழநிமாணிக்கம். தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும்  மேலாண்மை நிறுவனத்தில் செவ்வாய்க் கிழமை வாழை மற்றும் தென்னை பயிர் களின் மதிப்பு கூட்டல் சார்ந்த வேளாண்  தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில், “தேங்காய்  கொள்முதல் விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.12 முதல் 15 வரை இருந்தது. ஆனால் இப்போது ரூ.8 ஆக குறைந்துவிட்டது. தென்னந்தோப்பில் ரூ.8க்கு கொள்முதல் செய்யப் பட்டாலும், சந்தையில் ரூ.20-க்கும்  அதிகமாகவே விற்பனை செய்யப்படு கிறது. இடையில் பணம் தட்டிப் பறிக்கப்படுகிறது. எனவே தென்னையில் நீரா, தேங்காய் எண்ணெய் போன்ற மதிப்புக்  கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க  வேண்டும். கேரளத்தில் 10 ஊர்கள் சேர்ந்து கூட்டுறவு சங்கம் தொடங்கி, தேங்காய் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.  நம்முடைய எல்லா விளைபொருள் களுக்கும் சந்தையில் தேவை அதிக மாக இருக்கிறது. விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதைவிட, மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் நடைமுறையை விவசாயி கள், தங்களுடைய அடுத்த தலைமுறை யினருக்கு கற்றுத் தர வேண்டும். இது குறித்து இளைஞர்களிடம் அதிகள வில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பி னர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை  உறுப்பினர்கள் துரை. சந்திர சேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா. அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர்  அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, வேளாண் துறை இணை இயக்குநர் ந.க.நல்லமுத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிறுவன இயக்குநர் வெ.பழனிமுத்து வரவேற்றார். தோட்டக்கலைத் துறைத் துணை இயக் குநர் அ.வெங்கட்ராமன் நன்றி கூறி னார்.