கோழிக்கோடு, ஆக.5-
ரப்பர் விலையில் ஒன்றிய அரசிடம் இருந்து சாதகமான நடவடிக்கை இல்லை என்றும், உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக் காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தாமரசேரி மறைமாவட்ட ஆயர் ரெமிஜியோஸ் இஞ்சனானி தெரிவித்துள்ளார்.
விவசாய பிரச்சனை களில் விவசாயிகள் அமை ப்புகளை ஒன்றிணைத்து காசர்கோடு முதல் திரு வனந்தபுரம் வரை விவ சாயிகள் யாத்திரை நடத்தப் படும். விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவ சாய உற்பத்தி பொருட்க ளின் விலை குறைந்துள்ளது. அதன் சந்தைப்படுத்தல் திறன் மங்கிவிட்டது. விவ சாயிகள் மிகவும் பாதிக் கப்பட்ட பிரிவாக மாறியுள்ள னர். விவசாயப் பிரச்சனை களில் விவசாய அமைப்பு கள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்கும் சக்தியாக மாறும். “அரசியல் அழுத் தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று பிஷப் கூறினார்.