districts

img

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம்!

தஞ்சாவூர், ஏப்.2- ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவ டிகளை அகற்றுவோம் என்றார் பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம்  செய்தார். அப்போது அவர் சானூரப்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததா வது: தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும் போது மற்ற மாவட்டங்களை விட கூட்டம் அதிகள வுக்கு உள்ளது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இக்கூட்டங்களைப் பார்க்கி றோம். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றி  பெற்றால் சுங்கச்சாவடிகளை அகற்று வோம். ஆனால், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் வாக்குச் சாவடி களை அவர்கள் எடுத்துச் சென்றுவிடு வர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.310- க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு உருளை விலை இப்போது ரூ.1,100 வரை அதிகரித்தது. தற்போது தேர்தல்  நேரம் என்பதால், மகளிர் தினத்தை யொட்டி ரூ.100 குறைக்கிறோம் என  பிரதமர் அறிவித்துள்ளார். இதை யெல்லாம் மக்கள் நம்பாமல் விழிப்பு ணர்வுடன் இருக்கின்றனர். எனவே, இந்த முறை தமிழகம், புதுச்சேரியில் 40  தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இப்பிரச்சாரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு.தமி முன் அன்சாரி, திமுக மத்திய மாவட்டச்  செயலர் துரை.சந்திரசேகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.