districts

img

பம்பரச் சின்னம் இல்லையென்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்!

திருச்சிராப்பள்ளி, மார்ச் 27- பம்பரம் சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய துரை.வைகோ கூறிய தாவது: பம்பரம் சின்னம் ஒதுக்க  முடியாது என தேர்தல் ஆணையம்தான் கூறியுள் ளது. நீதிமன்றம் கூற வில்லை. சின்னம் விவகா ரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால், அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின் னத்தை மக்களிடம் கொண்டு  சேர்க்க 24 மணி நேரம்கூட தேவைப்படாது. பா.ஜ.க-வை உண்மை யாக எதிர்க்கும் அணியாக திமுக அணி இருக்கிறது. திருச்சியில் திமுக அணி  சார்பில் மதிமுக போட்டி யிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எங்க ளுக்கு பம்பரச் சின்னம் கிடைக்காவிட்டால், வேறு  சின்னத்தில் போட்டியிடு வோம். வருமான வரித் துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கின்றன. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவ ணங்களை கொடுத்து விட் டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ் வொரு காரணத்தை கூறு கிறார்கள்.  மதிமுக, விசிக மட்டு மல்ல; நாம் தமிழர் கட்சிக் கும் சின்னம் ஒதுக்கவில்லை.  பா.ஜ.க-வை எதிர்க்கும் அரசி யல் இயக்கங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ.க-விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல் படுகிறது. எதிர்க்கட்சிகளை முடக்க  நினைக்கும் பா.ஜ.க-விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டு வார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட் டவற்றை கொண்டு, ஏதாவது  ஒரு விதத்தில் இடையூறு கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான். திருச்சி யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண் டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொ கையா, மாவட்டச் செயலா ளர் வெல்லமண்டி சோமு, பூமிநாதன் எம்.எல்.ஏ ஆகி யோர் உடனிருந்தனர்.