districts

img

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புக்காக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கிறேன்

புதுக்கோட்டை, அக்.19:-  ஏழை, எளிய மாணவர் களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அள விலான கலைத்திருவிழா வை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-  கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த முறை நிகழ்வுகளில் கலந்து கொள் ளும் போது நுழைவாயில் அமைக்கப்படும் என்று தெரிவித்தேன். அதுபோல தற்போது நுழைவாயில் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஆசிரியர் கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் தரமான சாலை வசதிகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பள்ளியின் வளர்ச் சிக்கு மட்டுமல்லாமல் கந் தர்வகோட்டை தொகுதியில் உள்ள அனைத்து பள்ளி களுக்கும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளுக்காக என்னுடைய தொகுதி மேம் பாட்டு நிதியை அதிகமாக ஒதுக்கி வருகிறேன். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியி லும், கலையிலும் சிறப்பிடம் பெற்று விளங்க தொடர்ந்து உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கு தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக் வாழ்த்திப் பேசினார். முன்ன தாக ஆசிரியர் ராஜலெட்சுமி வரவேற்க, ஆசிரியர் அண்ணா துரை நன்றி கூறினார்.