சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி சென்னையில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன், பொருளாளர் சைதை ஜெ., துணைச் செயலாளர் கி.அன்பரசன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.