புதுக்கோட்டை/திருவாரூர்/மயிலாடுதுறை, ஏப்.9- புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், வாக்களிப் பதன் அவசியம் குறித்து, நாட்டுப் புற கலைஞர்கள் மூலம் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்த வாக்காளர்களுக்கு, தேர்தல் தொடர்பான விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வழங் கினார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ் வர்யா, வட்டாட்சியர் பரணி, நக ராட்சி ஆணையர் (பொ)) ஷியா மளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் அருகே உள்ள நீலக் குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் சமுதாயக் கல்லூரி இணைந்து, வாக்களிப் பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். திருவாரூர் ரயில் நிலையம் அருகே காலையில் துவங்கிய பேரணி, பேருந்து நிலையம், கடைவீதியை கடந்து முக்கிய சாலை வழியாக சென்று தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரி யர்கள், அலுவலர்கள் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இளம் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி. மகாபாரதி வாக்காளர் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு வாச கங்கள் அச்சிடப்பட்ட துணி பை களை வழங்கினார். நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவ லர் மு.மணிமேகலை, கூட்டுறவு சங் கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் தயாள விநாயக அமல்ராஜ், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடனி ருந்தனர். கரூர் 2024 நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகை யில், தேர்தல் தொடர்பான விழிப்பு ணர்வு குறும்படத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் வெளி யிட்டார். மாவட்ட வருவாய் அலுவ லர் ம.கண்ணன், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர் மற்றும் வட்டாட்சி யர் (தேர்தல்) முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.