districts

img

நூறு சதவீதம் வாக்களிப்போம்: ரங்கோலி கோலப் போட்டி

அரியலூர், மார்ச் 21- மக்களவைத் தேர்தலில்  நூறு சதவீதம் வாக்களிப்ப தின் அவசியம் குறித்து, அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரங் கோலி கோலப் போட்டி வியா ழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப்  போட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், ரங் கோலி கோலமிட்டு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இக் கோலத்தை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டார். கரூர் கரூர் கே.பிச்சம்பட்டி பகுதியில் வாக்காளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கோலம் வரைந்தனர்.