districts

புதிய அணு உலை, அணுக்கழிவு மையங்கள் அமைப்பதை முதல்வர் எதிர்க்க வேண்டும்

பாபநாசம், டிச.29 - கூடங்குளத்தில் புதிய அணு உலை கள் மற்றும் அணுக்கழிவு மையங்கள் அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடு மையாக எதிர்க்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா  வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத் தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது  தொடர்பாக, டிச.26 அன்று இந்தியா, ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.  இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய  மக்களுடனான கூட்டத்தில், டிசம்பர் 26  அன்று உரையாடிய போது “என் முன்னி லையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ்  முன்னிலையிலும், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பாக சில மிக முக்கியமான ஒப்பந் தங்களில் கையெழுத்திட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அணு உலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ தொடங்கப்பட் டால், அது அந்தப் பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.  2018 இல் குஜராத் மாநிலத்திலும், கர்நாடக மாநிலம் கோலார் தங்க சுரங்கத் தில் அணுக் கருவிகளை பாதுகாக்க முடி வெடுத்த போதும், அம்மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக அதனைக் கடுமை யாக எதிர்த்ததோடு, அத்திட்டங்களை நிறுத் தியும் வைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் அணு உலைகளையும், அணுக்கழிவு மையத்தையும், மேலும் மேலும் உரு வாக்கி வருவது கவலை அளிக்கிறது.  தமிழ்நாடு முதல்வர், பிரதமர் நரேந்திர  மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோ ரிக்கை வைத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மக்களவை யில் இது குறித்து கேள்வி எழுப்பியிருந் தார். இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை.  தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நல னுக்கு எதிராகவே ஒன்றிய அரசு செயல் பட்டு வருவது நன்றாக தெரிகிறது. ஒன்றிய  பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நா டும், தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படு வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது.  அண்மையில் தூத்துக்குடியில் பெய்த  பெருமழை, காலநிலை மாற்றத்தின் தீவி ரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ள  நிலையில், புதிய உலைகளை அமைக்கும்  முயற்சி சூழலியலுக்கு எதிரானது. கூடங்குளத்தில் புதிய அணு உலை களையும், அணுக்கழிவு மையங்களை யும் அமைக்கும் முடிவை அந்தப் பகுதி  மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு  மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மிகக் கடுமை யாக எதிர்க்க வேண்டும். அதற்கு மனித நேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.