districts

img

எச்இபிஎப் தொழிற்சாலையின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.9-  எச்.இ.பி.எப். தொழிற்சாலையின் நிர்வாகச் சீர்கேடு, தொழிலாளர்கள் மீது தொடுத்து வரும் அடக்கு முறையைக் கண்டித்தும், இந்த ஆண்டிற்கான உற்பத்தி இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்/ தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மூலப் பொருட்கள் உடனடியாக தர வேண்டும். தேவையான உபகரணங் கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 6 ஆம் தேதி முதல்  10 ஆம் தேதி வரை கண்டன வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து வியாழ னன்று நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சங்க உதவி தலைவர் விஜயன் தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் இரணியன், சங்க நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள் கலந்துகொண்டனர். இன்று (10-ஆம் தேதி) கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடைபெற உள்ளது.  இந்த கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.