districts

img

நாளை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி: ஸ்ரீரங்கத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

‘தமிழகத்தின் அமைதியை காப்போம், மதவாத சக்திகளை முறியடிப்போம்’ என வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அக்.11 அன்று தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடக்கிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இதுகுறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கோட்டத் தலைவர் சண்முகம், துணை தலைவர் செல்வி குமரன், கதர் ஜெகநாதன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், மூத்த தலைவர் வீரமுத்து, திராவிடர் கழக ஸ்ரீரங்கம் நகர தலைவர் கண்ணன், விசிகஸ்ரீரங்கம் பகுதி பொறுப்பாளர் சிந்தனை சேகர், சிபிஐ ஸ்ரீரங்கம் பகுதி குழு செயலாளர் சொக்கி.சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.