districts

வீடு புகுந்து நகை திருட்டு

தஞ்சாவூர், ஆக.21-

     தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில்வே நிலை யம் எதிரே, வர்த்தக சங்க கட்டடத்தின் அருகில் வாடகை  வீட்டில் குடியிருந்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ். இவரது மனைவி பவித்ரா (26). விக்னேஷ் வெளியூர் சென்று விட்ட நிலையில், பவித்ரா தனது மாமி யார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.  

    அப்போது நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி, காசு மற்றும் குழந்தையின் வெள்ளிக் கொலுசு, அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின்  பேரில் பேராவூரணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.