புதுக்கோட்டை, நவ.13 - கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத் திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டம், லேனா விளக்கு, புதுக்கோட்டை அண்ணா சிலை ஆகிய பகுதிகளுக்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்திக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித் தார். சட்டமன்ற உறுப்பினர் மரு.வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், கோட்டாட்சியர் முரு கேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் கவிதைபித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.