districts

ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

தஞ்சாவூர், ஜூலை 28-

     ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர் களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும்  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பட்டுக் கோட்டை தபால் கோட்டம் அறிவித்துள்ளது.

     இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை தபால் கோட்ட அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2023 செப்டம்பர் மாதம் 30 வரை, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றி தழை, தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரில்  சென்று உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்கள் தவிர்க்கப் படும்.

   ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா  போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதிய தாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதி யதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும்  ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரி வித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு  சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றி தழை சமர்ப்பிக்க முடியும். எனவே மாநில  அரசு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.