districts

பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு பயிற்சி

அறந்தாங்கி, மே 2-

   புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி அளவில் செயல்படும் உயர்கல்வி வழி காட்டுதல் குழுவிற்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், வழிகாட்டி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். பள்ளி மேலான்மை குழு தலைவர். துனைத் தலைவர்.கல்வியாளர். பள்ளி  முன்னாள் மாணவர்கள். நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர்  என அறந்தாங்கி, ஆவுடையார்கோவில். மனமேல்குடி.அரிமளம் உள்ளிட்ட 25 பள்ளிகளில் இருந்து 300 பேர் கலந்து கொண்டனர்.  

   மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனர் ராஜ்குமார், தனசேகரன், ஆசிரியர் பயிற்றுநர்கள். அழ கேசன், பரிசுத்தம். செல்லத்துரை. ஒருங்கினைப்பாளர் சர வணன். ஆகியோர் பயிற்சியளித்தனர். முன்னதாக கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் எஸ்.ரமேஷ் வரவேற்றுப்  பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம் நன்றி கூறினார்.