புதுக்கோட்டை, ஜன.12 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு செவித்திறன் குறைவுடை யோர் உயர்நிலைப் பள்ளி மாணவர் களுக்கான, பழந்தமிழர் பண்பாடு மரபு பயண வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பழந்தமிழர் பண்பாடு மரபு பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகை யில், கொடும்பாவூரில் உள்ள மூவர்கோ வில், ஐவர் கோவில், குடுமியான்மலை, சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்க ளுக்கு 50 மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பழந்தமிழர் பண்பாடு மரபு பயண வாகனத்தை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளியன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.