மதுரை, மார்ச் 6- மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ் உயராய்வு நடுவத்தின் சார்பாக ‘தமிழ் வனம் 2025’ கல்லூரிகளுக்கான கலை, பண் பாட்டுப் போட்டிகள் வியாழனன்று நடை பெற்றன. இதனொரு பகுதியாக, தமிழர்களின் பண் டைய கால வாழ்வியலை நினைவுபடுத்தும் விதமாக மிகப் பழமையான வீட்டு உப யோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட் கள், அலங்காரப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இதனை பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பார்வை யிட்டு மகிழ்ந்தனர். பார்வையாளர்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறித்து டோக் பெருமாட்டி கல்லூரி மாணவியர் விளக்கி னர். தமிழ்த்துறை மாணவி அருணா கூறுகை யில், ‘மரபுப் பொருட்கள் கண்காட்சியை முதன் முதலாக எங்கள் துறை நடத்து கிறது. இந்தப் பொருட்கள் குறித்து நாங்க ளும் தெரிந்து கொள்வதுடன், மாணவ, மாண வியருக்கு நாங்கள் எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களும் தெரிந்து கொள்கிறார்கள். இங்குள்ள அனைத்துப் பொருட்களும் மாணவிகள், ஆசிரியர்களால் பல்வேறு இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நிறைய பொருட்களை நாங் களேகூட இதுவரை பார்த்ததில்லை. தாமி ரப்பானைகளில் தண்ணீர் ஊற்றி அதனை அருந்தும்போது உடல் நலத்திற்கு பேருதவி யாக இருக்கும் என்பது வியப்பாக உள்ளது’ என்றார். அதே துறையைச் சேர்ந்த மாணவி லலிதா ஸ்ரீ கூறுகையில், ‘இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள பல்வேறு பொருட்கள், இன்றைக்கு நடைமுறையில் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. அதன் பெயர்கள்கூட நிறைய பேருக்கு தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, பானைக்கு அடியில் வைக்கக்கூடிய, சண லால் செய்யப்பட்ட பிரிமனையின் பயன்பாடு மிகவும் வியப்பைத் தருகிறது. தரையில் மட்டு மன்றி, தண்ணீர் சுமந்து வரும்போது தலை யில் பிரிமனையை வைத்து அதற்கு மேல் பானையைச் சுமந்திருக்கிறார்கள். அதே போன்றுதான் தவளைப்பானை. அதன் கனம் காரணமாக தற்போது பயன்பாட்டிலி ருந்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதேபோன்று சீர்வரிசைப் பொருட்கள், தற்போது நடைமுறையில் இருந்தாலும், அது சார்ந்த பழம்பொருட்கள் பயன்பாட்டில் இல்லை. அவற்றின் பெருமையை இன் றைய தலைமுறையினர் உணர வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கம்’ என் றார். மற்றொரு மாணவி அபிநயா கூறுகை யில், ‘இங்குள்ள பொருட்களையெல்லாம் சிறு வயதில் பார்த்திருக்கிறோம். அம்மா-அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறோம். இந்தப் பொருட்களைக் கொண்டு அவர்கள் விளை யாடி மகிழ்ந்துள்ளனர். தற்போது புத்தக்கத் தில் படித்தது, கேள்விப்பட்டது. அனைத்தை யும் தற்போது கண் முன்னே காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிற கல்லூரி மாணவ, மாணவியர் இதுகுறித்து எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது மிக வும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய மட்பாண்டக் கலைஞர்களால் தயாரிக்கப் படும் மண்பாண்டங்களை தற்போதுள்ள மக்கள் வாங்கி பயன்படுத்துவது குறைவாக உள்ளது. பாத்திரக்கடைகளுக்குச் சென் றால் பேரம் பேசாமல் வாங்கி வருகின்ற நாம்தான், குயவர்களின் தயாரிப்புகளை பேரம் பேசுகிறோம். மண்பாண்டப் பொருட் கள் நம் உடன் நலனுக்கு ஏற்றவை. அது போன்ற பொருட்களை வாங்கி நாம் அவர் களை ஆதரிக்க வேண்டும். அன்றைய பல்லாங்குழிதான் இன்றைக்கு அபாகஸ் முறை. ஆனால், கணிதத்திறனை அதிக ரித்துக் கொள்வதற்காக பணம் கட்டிப் படிக்கின்றோம். நம் வீட்டிலுள்ள முதி யோர்களிடம் கேட்டாலே நிறைய பாரம் பரிய விளையாட்டுக்களை நாம் தெரிந்து கொள்ளலாம்’ என்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அஞ்சலி அன்னாபாய் ராஜசேகரன் கூறுகையில், ‘மரபுப் பொருள் கண்காட்சியைப் பார்வை யிடும்போது எனக்குள் பழைய நினைவு களைக் கொண்டு வந்தது. நாங்கள் முன்னர் பயன்படுத்திய பொருட்களைத் திரும்பக் காணும்போது மெய்சிலிர்த்துவிட்டேன். இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை யெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்பு பவர்களுக்காகவே எங்களது தமிழ்த்துறை இப்பழம் மரபை மீட்டெடுத்துக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கண்காட்சியை மேலும் விரிவாக்கம் செய்து வருகின்ற தலைமுறை யினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்றார்.