அரியலூர், ஆக.3-
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் சாகிரா பானு தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளை யம் பேருந்து நிறுத்தம், தா.பழூரில் கல்வி நிறு வனத்துக்கு முன், துளாரங்குறிச்சி எல்லை யில், செந்துறை பிரிவு சாலை, நகருக்குள் அண்ணா சிலை, தா.பழூர் பேருந்து நிறுத்தம், விநாயகர் கோயில், அம்பேத்கர் சிலை உள் ளிட்ட 8 இடங்களில் நேரக்கட்டுப்பாடு குறித்த தகவல் பலகைகளைத் திறந்து வைத்த அவர், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், அதே போல் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாக னங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கனரக வாகனங்களை இயக்கு பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். நிகழ்ச்சிகளில், காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன், போக்குவரத்து காவ லர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.