districts

சுமைப்பணி தொழிலாளர் சங்கம் நிதியுதவி வழங்கல்

நாகப்பட்டினம், ஆக.8 -

     நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மோ கனூர் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய சுமைதூக்கும் தொழிலாளர் பரமசிவம் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய படத்திறப்பு அன்று, அவரது குடும்பத்திற்கு சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டக்குழு சார்பில்  ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, சுமைப்பணி தொழி லாளர் சங்க நிர்வாகிகள் ஏ.தமிழரசன், டி.ஜெயராமன், இ. இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.